
தெஹிவளை மற்றும் இரத்மலான பகுதிகளில் நேற்று 160 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை மாநகர சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தெஹிவளையிலிருந்து 90 தொற்றாளர்களும் இரத்மலானயில் 70 தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய (03) நிலவரப்படி இரு பகுதிகளிலும் நடத்தப்பட்ட 2139 பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து 160 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்