சுகாதார அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய அடுலுகம நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ,குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சுகாதார அதிகாரிகள் மீது எச்சில் துப்பி அவர்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டுருந்தார்.
மேலும் ,குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
