கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் முனையம் விருந்தினர்களுக்காக நாளை (05) முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு பயணி ஒரு விருந்தினரை மட்டுமே புறப்படும் முனையத்திற்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார்.
பார்வையாளர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
விமான நிலையத்தால் செயல்படுத்தப்படும் சுகாதாரக் கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் பார்வையாளர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்