மொஹமட் சியாம் கொலை வழக்கு - மரண தண்டனை பெற்றவருக்கு கொரோனா


வெலிகடை சிறைச்சாலையில் உள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



இதற்கமைய அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில் அவர் கைதாகி, மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்