டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் ஒருவாரமாக ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் , சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை (25/02) மரணமானர்.
செங்கலடி, ரமேஷ்புரத்தை சேர்ந்த சகோதரர் சுதாகர் (27), ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களது அலுவலக உத்தியோகத்தராவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் சற்றுமுன் செங்கலடி பொது மயானத்தில் நடைபெற்றது.
மறைந்த சகோதரர் சுதாகரனின் மனைவி, மற்றும் உறவினர்களுக்கு மன அமைதியை இறைவன் வழங்குவானாக.
(ஏறாவூர் நஸீர்)

0 கருத்துகள்