சமூக வலைத்தளங்களில் சஹ்ரான் ஹசீமினுடைய சிந்தனைகள் மற்றும் தீவிரவாதத்தை பரப்பிய நான்கு பேர் கைது..

சமூக வலைத்தளங்களில் சஹ்ரான் ஹசீமினுடைய சிந்தனைகள் மற்றும் தீவிரவாதத்தை பரப்பும் விதமாக

செயல்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில்   நான்கு பேரை  தீவிரவாத தடுப்பு   பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் தீவிரவாதம் தொடர்பான  வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்று போலீஸ் ஊடக  செய்தித் தொடர்பாளர் டிஐஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.


சந்தேக நபர் ஒருவர்  31 வயதான வெல்லம்பிட்டியில் வசிப்பவர், மற்றவர் 32 வயதான திஹாரியாவில் வசிப்பவர்.


"அவர்கள் 'ஒன் உம்மா' என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளனர், மேலும் கத்தார் நாட்டில் இருந்து  தீவிரவாத சித்தாந்தங்கள் பல்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இவர்கள்  இலங்கையை விட்டு வெளியேறி கத்தாரில் பணிபுரிந்து வருகின்றனர். பின்னர், எங்கள் அறிவிப்பின்படி, அவர்கள் நவம்பர் 21 அன்று கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். என போலிஸ் ஊடக பிரிவு இவர்களில் இருவர் பற்றி  மேலும் தெரிவித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்