வாகன அபராதக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்துவது மற்றும் சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
புள்ளிகள் வழங்கும் முறையை செயல்படுத்த சட்டங்கள் மற்றும் தரவு அமைப்புகள் இருக்கின்ற போதிலும் அதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வீதிகளில் யாசகம் எடுப்பதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
