Headlines
Loading...
விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி விற்பனை – அரசாங்கம்!

விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி விற்பனை – அரசாங்கம்!





தைப்பொங்கல் பண்டிகைக்கு அமைவாக விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதியொன்று சதொச நிறுவனத்தில் 14 ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

20 பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பொதி 5 ஆயிரத்து 771 ரூபாய் பெறுமதியானதாகும் எனவும் இது 3 ஆயிரத்து 998 ரூபாய்க்கு மக்களுக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


இந்தப் பொதியை தொலைபேசி அழைப்பின் ஊடாக வீடுகளில் பெற்றுக்கொள்ளவதற்கு 1998 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments: