Headlines
Loading...
 மின் துடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

மின் துடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை




நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்சார துண்டிப்பு தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று நாளை (17) இடம்பெறவுள்ளது.


இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனத்தின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக, கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.




மின்சார விநியோகத்திற்கு அவசியமான எரிபொருள் விநியோகம் தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments: