Headlines
Loading...
  இன்றைய தினம் 1,253 பேருக்கு கொவிட்

இன்றைய தினம் 1,253 பேருக்கு கொவிட்




நாட்டில் இன்றைய தினம் 1,253 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 621,985 ஆக அதிகரித்துள்ளது.




இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




அதன்படி, நாட்டில் இதுவரை 15,656 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.




இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 405 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.




இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 582,064 ஆக அதிகரித்துள்ளது.


0 Comments: