Headlines
Loading...
   இந்திய மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல்

இந்திய மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல்




யது பாஸ்கரன்

கிளிநொச்சி இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் எஸ். சிவசுப்பிரமணியம், இன்று (27) உத்தரவிட்டார்.

இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 08 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் எஸ். சிவசுப்பிரமணியம் முன்னிலையில் இன்று (27) ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த 08 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு உட்பட்டு இருப்பதனால் அதற்கான உரிய உணவு, மருந்துகளை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.

ஷஇவ்வாறு கைது செய்யப்பட்ட 8 பேரில் 16 வயதுடைய 18 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments: