Headlines
Loading...
மனிதர்கள் உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.




இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத்திரத்தை உயிர்கள் வாழும் சூழ்நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




இந்த கோள் நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு மிகவும் குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இருக்காது.




பூமியில் இருந்து 117 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இருக்கும் தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 60 மடங்கு குறைவாகும்.




உயிர்கள் வாழக்கூடிய மண்டலம் என்பது ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியில் அமைந்துள்ள கோள்களில் திரவ நீர் இருக்கும் சூழ்நிலையை கொண்டிருக்கும். எனவே உயிர்கள் வாழ இது உதவும் என அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது


0 Comments: