Headlines
Loading...
  அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான விசேட குழு இன்று கூடுகிறது!

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான விசேட குழு இன்று கூடுகிறது!



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்ட உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கான குழு முதல் முறையாக இன்று கூடவுள்ளது.




நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில், அந்த அமைச்சில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.




உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 Comments: