கைக்குண்டுடன் ஒருவர் கைது




மட்டக்களப்பு - காத்தான்குடி, பாலமுனை பகுதியில் வைத்து நேற்று இரவு கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு பாலமுனையில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு அருகில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவராவார்.

குறித்த நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்