![நாளைய தினம் 5 மணி நேர மின்வெட்டு](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWwnd32JXWQjokADWuCGDLKe9CzNgOaPf_Qx5YV4T5ZzKJOubMEFLHGw1qhU62AIpn88Tp5DaU75bleANT73cKcjaVUfESEuTPzlJzxswO-nJuzCGVhe_wPDWcGH3u2wdSb0qBpY_-t0PNSa_-OrzLndvdZ3Sp4S83hqFMi-8mZ5AmEAY25mo5OVf3Gw/w700/image_b90d67bf3f.jpg)
நாளைய தினம் 5 மணி நேர மின்வெட்டு
நாளை தினமும் (23) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 1 மணிநேரம் மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி 20 நிமிடங்களும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
0 Comments: