இராணுவத் தளபதியின் அதிரடி அறிவிப்பு!




நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு முப்படையினருக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு ஆதரவினை பெற்றுத்தருமாறு அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்