அநுராதபுரத்தில் 22 பேர் பொலிஸாரால் கைது


அநுராதபுர நகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரின் வீடுகள், அநுராதபுர நகர மேயரின் வீட்டையும் தாக்கியழித்து, தீவைத்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு உள்ளிட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


மேலும் முன்னணி வர்த்தகர் உள்ளிட்ட 20 - 53 வயதுடைய நபர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.