🔴தங்கத்தின் விலையில் மீண்டும் சடுதியான மாற்றம்! நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி


செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (10.07.2023) 150,000 ரூபா என்ற மட்டத்தை அடைந்துள்ளது.


கடந்த சில நாட்களாக 148,000 ரூபா தொடக்கம் 149,000 ரூபா என்ற நிலையில் இருந்தது.


இந்த நிலையிலேயே திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.


⭕இன்றைய தினத்திற்கான நிலவரம்


🔹கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 150,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.


🔹அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,000 ரூபாவாக காணப்படுகிறது.


இதேவேளை உலகச் சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 14 டொலர்களால் அதிகரித்து 1925.89 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.


இந்த விலையேற்றம் உள்நாட்டு சந்தையிலும் தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.