புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்படி ,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (14) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் சப்ரி இதனைத் தெரிவித்தார்.
மேலும் ,அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் ஆனால் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.