24,000 கிலோ கிராம் அப்பிள் பழங்கள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டன!

 


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 கிலோ கிராம் ஆப்பிள் பழ தொகையினை அதன் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளாததன் காரணமாக அது தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள விலங்குகளுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.


இதன்படி ,குறித்த ஆப்பிள் கொள்கலன்களை அதனை இறக்குமதி செய்தவர்கள் இதுவரையில் கொண்டு செல்லாமல் இருப்பது தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றை அடுத்து குறித்த சி.அய்.சி.டி நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்தே இவற்றை மிருககாட்சிசாலைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவித்துள்ளார்.


அதற்கமைய  இன்னும் பல பொருட்களை அவை வீணாக்கப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் அதனை பிரயோசனமான ஒரு விடயத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் துறைமுக அதிகாரிகளுக்கு இதன்பொழுது பணிப்புரை வழங்கியுள்ளார்.


மேலும் இவ்வாறு வழங்கப்பட்ட அப்பிள் பழங்கள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.