நாளை வருகின்றது லாஃப்ஸ் எரிவாயு


லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல் நாளை (04) இலங்கைக்கு வரவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த கப்பலில் சுமார் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை.


டொலர் நெருக்கடி காரணமாக நாட்டில் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.