ஜுலை 9 போராட்டத்தை தடுக்க மீண்டும் அவசரகால சட்டத்தை கொண்டு வர கோட்டா முயற்சி?

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியை விட்டு செல்ல கோரி, நாளை மறுதினம் 9ஆம் திகதி நடத்தப்படவுள்ள மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நாடு முழுவதும் அவசர சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில், அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி விகும் லியனகே உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறித்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படாத போதிலும் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.