8 மாதங்களில் 19 ஓட்டோக்கள் பதிவு


கடந்த வருடம் நாட்டில் 2,093 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 19 முச்சக்கர வண்டிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.


இந்த வருடத்தில் 6,209 மோட்டார் சைக்கிள்களும் 964 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  சுமார் 15,000 வாகனங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 

2018 ஆம் ஆண்டில் 20,063 முச்சக்கர வண்டிகளும் 2019 ஆம் ஆண்டில் 15,490 முச்சக்கர வண்டிகளும், 2020 ஆம் ஆண்டில் 7,150  முச்சக்கர வண்டிகளும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


2011 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுகளுக்கு இடையில் வருடாந்தம் சராசரியாக 50,000 முச்சக்கர வண்டிகள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.