துறை­மு­கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்-குர்ஆன்களை விடுவிக்க திணைக்களம் சிபாரிசு!

Ceylon M
1 minute read
0


கொழும்பு துறை­மு­கத்தில் கடந்த 11 மாதங்­க­ளாக தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அல் -குர்­ஆனின் சிங்­கள, தமிழ் மொழி­பெ­யர்ப்பு மற்றும் இஸ்­லா­மிய நூல்­களை அடிக் குறிப்­பிட்டு விடு­விப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு சிபா­ரிசு செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.


கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடை­பெற்ற இக்­கு­ழுவின் கூட்­டத்தின் போதே இந்த சிபா­ரிசு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த வட்­டா­ரங்கள் குறிப்­பிட்­டன.

பாது­காப்பு அமைச்சின் அனு­ம­திக்­காக குறித்த சிபா­ரிசு புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சின் ஊடாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அனுப்­பி­ வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறித்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.


சவூதி அரே­பி­யாவின் புனித மக்கா நகரில் வசிக்­கின்ற இலங்­கை­யினைச் சேர்ந்த சாதீக் ஹாஜி­யா­ரினால் சுமார் 20 ஆயிரம் குர்ஆன் பிர­தி­களும் சுமார் 15 ஆயிரம் குர்ஆன் மொழி­பெ­யர்ப்பு பிர­தி­களும், இஸ்­லா­மிய நூல்­களும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு கடந்த 2024.05.16ஆம் திகதி ஜித்­தா­வி­லி­ருந்து அனுப்­பப்­பட்­டது.

இந்த இஸ்­லா­மிய நூல்­களைக் கொண்ட கொள்­கலன் 2024.06.22ஆம் திகதி கொழும்புத் துறை­மு­கத்­தினை வந்­த­டைந்­தது. எனினும், குறித்த கொள்­க­ல­னி­லுள்ள குர்ஆன் பிர­தி­களை மாத்­தி­ரமே வெளியில் எடுப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு சிபா­ரிசு வழங்­கி­யது.

இதனால், இந்த கொள்­க­லனில் காணப்­பட்ட அல்­குர்­ஆனின் சிங்­கள, தமிழ் மொழி­பெ­யர்ப்பு மற்றும் இஸ்­லா­மிய நூல்கள் கடந்த பல மாதங்­க­ளாக கொழும்பு துறை­மு­கத்தில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இதனை வெளியில் எடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வந்ததுடன் பாராளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பியமை சுட்டிக்காட்டத்தக்கது றிப்தி அலி) 


CeylonMuslim வட்ஸ்ப் இல் இணைய இங்கு க்ளிக் செய்க

To Top