தலைப்புச் செய்தி
ஒரு தேர்தலுமில்லை டிரெக்டாக ஜனாதிபதி தேர்தல் தானாம் - கிரியெல்ல
அடுத்த ஜனவரிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரம் உண்டு. ஆகவே மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் வருவதற்கான சாத்தியமுள்ளதாக பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியது அத்தியாவசியமாகும். எமக்கென்று அரசாங்கமொன்று அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கண்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இங்கு கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் லக் ஷமன் கிரியெல்ல மேலும் குறிப்பிடுகையில்,
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொட்டு சின்னம் 44 சதவீதத்தை பெற்றுக்கொண்டதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். என்றாலும் நாடளாவிய ரீதியில் மொட்டு சின்னத்திற்கு எதிராக 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் விவகாரத்தில் நாம் குழப்பமடையத் தேவையில்லை.
அத்துடன் அடுத்த ஜனவரிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரம் உண்டு. ஆகவே மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் வருவதற்கான சாத்தியமுள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கும் நாம் தயாராக வேண்டியுள்ளது. அதற்காக ஏற்பாடுகளை கிராம மட்டத்திலிருந்து தற்போதே முன்னெடுக்க வேண்டும்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியது அத்தியாவசியமாகும். எமக்கென்று அரசாங்கமொன்று அவசியமாகும். கிராம மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே அவசியமாக உள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு கிடைக்கபெற்ற வாக்கு வங்கியில் 80 சதவீதமானவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரித்தானதாகும். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஏதாவது செய்ய வேண்டுமாயின் எமக்கென்று அரசாங்கமொன்று அவசியமாகும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே அதற்காக எமது கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும் என்றார். (வி-வெ)
0 Comments: