அரசியல் களத்தில் பசீருக்கும் - ஹசனலிக்கும் நல்ல கிராக்கி; அதிரவைக்கும் அழைப்புகள்



முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர்  நாயகம் ஹஸன் அலி, இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள  தவி­சாளர் பஷீர் சேகு­தாவுத் மற்றும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், சமூக  நலன் விரும்­பி­களும்  கைகோர்த்து முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணி­யுடன் வந்து இணைந்து கொள்­ளுங்கள்.

முஸ்லிம் சமூ­கத்தைக் காப்­ப­தற்கு நாம் சக்தி மிக்­க­வர்­க­ளாக எம்மை மா ற்றிக் கொள்வோம் என முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின்  செய­ல­தி­பரும்,  முன்னாள் அமைச்­ச­ரு­மான  ஏ.எச்.எம்.அஸ்வர் அறை­கூவல் விடுத்தார். 

முன்னாள் அமைச்­சரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான குமார வெல்­க­மவின் அர­சியல் பிர­வே­சத்தின் 38 ஆவது  நிறைவு தொடர்­பாக நடை­பெற்ற பாராட்டு வைபவம்  அக­ல­வத்­தையில்  நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து  கொண்டு உரை­யாற்­று­கை­யிலே ஏ.எச்.எம்.அஸ்வர் இவ்­வாறு தெரி­வித்தார். 

அங்கு அவர்,  தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
இன்­றைய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்­சர்­களே முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தீர்த்து வைக்­கப்­ப­டாமை குறித்து அர­சாங்­கத்தின் மீது  அதி­ருப்தி கொண்­டுள்­ளார்கள்.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சினை தீர்த்து வைக்­கப்­ப­ட­வில்லை, வடக்கில் முஸ்­லிம்கள் மீது துவேசம்  காட்­டப்­ப­டு­கி­றது என்­கிறார். இதையே ரவூப் ஹக்­கீமும் கூறு­கிறார். 

இன்­னுமோர் முஸ்லிம் அர­சி­யல்­வாதி கூறு­கிறார். முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­களும் மதிக்­கப்­ப­டு­வ­தில்லை.  ஜனா­தி­பதி மாளி­கையில் அவர்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­றார்கள்.

ஆனால் இரா.சம்­பந்­த­னுக்கு  மாத்­தி­ரமே  மதிப்­ப­ளிக்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­ப­தி­ மா­ளி­கைக்கு  அவர் சென்றால் ஜனா­தி­பதி  எழுந்து நின்று வர­வேற்­கிறார். இதுதான் இன்­றைய முஸ்­லிம்­களின் அர­சியல் நிலைமை.

இந்த நிலையை நாம் மாற்­றி­ய­மைக்க வேண்டும். முஸ்­லிம்கள் நாம­னை­வரும் பல­மான அர­சியல் சக்­தி­யாக உரு­வாகி மஹிந்த  ராஜபக் ஷவை ஆத­ரிக்­க­வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி  தனது காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு சில பிரச்­சி­னைகள் ஏற்­பட்­ட­தென்­பதை  ஏற்­றுக்­கொண்­டுள்ளார். எதிர்­கா­லத்தில் அவ்­வா­றான  சம்­ப­வங்கள் இடம்­பெற இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என உறு­தி­ய­ளித்­துள்ளார். 

கடந்­த­கால அர­சாங்கக் காலத்தினை விட நல்லாட்சியிலே முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. பள்ளிவாசல்களுக்கு சவால்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே முஸ்லிம்களாகிய நாம் முஸ் லிம் முற்போக்கு  முன்னணியுடன் கைகோர்க்க வேண்டும் என்றார்.  (வி-வெள்ளி)