முஸ்லிம்களை பிரத்தியேகமாக சந்திக்கும் மஹிந்த; காணிப்பிரச்சினை குறித்து ஆய்வு

File Image


முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ இன்று செவ்­வாய்­க் கி­ழமை வட, கிழக்கு மாகா­ணங்­களின் முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.

இந்த கலந்­து­ரை­யாடல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கொழும்பு 7 விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள உத்­தி­யோ­கபூர்வ வாசஸ்தலத்தில் பிற்­பகல் 5 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­ட­லுக்­கான ஏற்­பா­டு­களை முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி மேற்­கொண்­டுள்­ள­தாக அதன் தலைவர் அப்துல் சத்தார் தெரி­வித்தார்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் வட, கிழக்கு முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்­டுள்ள மீள்­கு­டி­யேற்ற சவால்கள், காணிப்­பி­ரச்­சி­னைகள், தொழில்­வாய்ப்­புகள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இதேவேளை எதிர்­வரும் 9 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை மாலை 3 மணிக்கு நெலும் பொக்­குன மாவத்­தை­யி­லுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் காரி­யா­ல­யத்தில் அனைத்து தேர்தல் தொகு­தி­யி­லி­ருந்தும் பிர­தி­நி­திகள் கலந்துகொள்ளும் விஷேட கலந்­து­ரை­யா­ட­லொன்றும் நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் ஒவ்வோர் தேர்தல் தொகுதியிலிருந்தும் இரு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.   (V-Velli)