கிழக்கு முஸ்­லிம்கள் இணங்கும் வரை வட கி­ழக்கு இணைப்பு சாத்­தி­ய­மில்லை

File Image


கிழக்கில் வாழும் முஸ்­லிம்கள் எங்­க­ளுடன் இணங்கி வரும் வரைக்கும் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்­தியம் இல்லை. இதுதான் உண்மை என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்பின­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் பருத்­தித்­துறை தொகுதி தமி­ழ­ரசுக் கட்­சிக்­கிளைக் கூட்­டத்தில் கலந்து கொண்டு சம­கால அர­சியல் குறித்து உரை­யாற்றும் போதே அவர் இவ்வாறு தெரி­வித்தார்.

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் ச.சுகிர்தன் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் எம்.ஏ. சுமந்­திரன் எம்.பி மேலும் கூறிய­தா­வது;

தமி­ழ­ரசுக் கட்சி ஒரு சமஷ்டிக் கோரிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே உரு­வாக்­கப்­பட்ட கட்சி. இன்­றைக்கு நாங்கள் ஒரு புது அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் உரு­வாக்­கு­வ­தற்­கான ஒரு வேலைத்திட்­டத்தில் இறங்­கி­யுள்ளோம். சமஷ்டி முறை­யி­லான அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் எங்­க­ளுக்கு தேவை என்­பது கட்­சி­யி­னு­டைய அடிப்­படைக் கோட்­பாடு. இந்த ஆணையின் பிர­காரம் நாங்கள் இப்­போது நாட்டில் உள்ள அனைத்துக் கட்­சி­க­ளோடும் சேர்ந்து இப்­ப­டி­யான அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை உரு­வாக்கும் பணியில் ஈடு­பட்­டுள்ளோம்.

ஆயுதப் போராட்டம் முறி­ய­டிக்­கப்­பட்­டு­விட்­டது. ஆனாலும் ஆயுதப் போர் நடந்த காலத்­திலே சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பு எமக்குத் தட்டில் வைத்துத் தரப்­பட்­டது. ஆனால், அதனை வேண்டாமென்று உத­றி­விட்டு இப்­பொ­ழுது ஜன­நா­யக ரீதி­யி­லேயே பேச்­சு­வார்த்தை மூல­மாக  அதைப் பெறு­வ­தற்கு வலி­யு­றுத்­து­கிறோம். ஒரு முறை யாழ்ப்­பாணம் வந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, 2005 ஆம் ஆண்டு சமஷ்டி வழங்கத் தயார் எனச் சொல்­லி­யி­ருந்தார். ஆனால் அதை வேண்டாம் என்று மஹிந்­த­வுக்கு  வாக்­க­ளித்­தீர்­களே என ரணில் வினா­யெ­ழுப்­பி­யி­ருந்தார்.

சமஷ்­டிக்கு இரண்டு குணா­தி­சயங்கள் இருக்க வேண்டும். ஒன்று அதி­கா­ரப்­ப­கிர்வு. சில அதி­கா­ரங்கள் மாநி­லங்­க­ளுக்கு கொடுக்­கப்­ப­டு­கின்ற பொழுது அந்த விட­யங்கள் சம்­பந்­த­மாக முழு அதி­கா­ரங்­களும் மாநி­லங்­க­ளுக்கு கொடுக்­கப்­பட வேண்டும். அதில் மத்­திய அரசு தனது ஆதிக்­கத்தைச் செலுத்தக் கூடாது.

இரண்­டா­வது, கொடுக்­கப்­பட்ட அதி­கா­ரத்தை அந்த மாநி­லத்­தி­னு­டைய அங்­கீ­காரம் இல்­லாமல் திரும்பப் பெற முடி­யா­த­தாக இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்­சங்­களும் இருந்தால் அது சமஷ்டி அர­சி­ய­ல­மைப்புச் சட்டம். வடக்கு, கிழக்கு இணைப்பு எங்­க­ளு­டைய அபி­லா­ஷையின் ஓர் அடிப்­படை. அதில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்தும் இல்லை. வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட வேண்டும் ஆனால் அது உட­னடிச் சாத்­தியம் இல்லை

கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் எம்முடன் இணங்கி வரும் வரைக்கும் அது சாத்­தியமில்லை. அது தான் உண்மை. இதைச் சொல்லிக் கொண்டு இன்னும் கிழக்கில் இருக்­கின்ற முஸ்லிம் மக்­களை அந்­நி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான பேச்­சு­களைப் பேசிக் கொண்­டி­ருந்தால், யார் வடகி­ழக்கு இணைப்­புக்கு எதி­ராக செயற்­ப­டு­கி­றார்கள். முஸ்லிம் மக்­களின் மனங்­களை நோக­டிப்­ப­தற்­கான பேச்­சு­க­ளையே தொடர்ச்­சி­யாக பேசிக் கொண்­டி­ருப்­பதைப் பார்த்தால்  வடக்­கு­கி­ழக்கு இணைப்பு ஏற்­ப­டாமல் செய்­வ­தற்­கா­கவே  சிலர் செய­லாற்­று­கி­றார்­களோ எனத் தோன்­று­கி­றது. 

உண்­மையில் நாங்கள் முஸ்லிம் மக்­களை திரும்ப அர­வ­ணைக்க வேண்டும். அவர்­க­ளுக்கு எங்கள் மீது நம்­பிக்கை வரவேண்டும். இந்த இரண்டு தரப்­பி­னர்­க­ளிலும் பிழைகள் இருக்­கின்­றன. அதனை தீர்க்க வேண்டும். அப்­பி­ழை­களை தீர்ப்­ப­தற்­கான பாதையில் நாங்கள் அடி­யெ­டுத்து வைத்தால்தான் அது சாத்­தி­ய­மாகும்.

ஆனால் அதனை நாங்கள் கைவிடப் போவ­தில்லை. அது முஸ்லிம் மக்­க­ளுக்கும் நன்கு தெரியும். முஸ்லிம் தலை­மை­க­ளுக்கும் தெரியும். இவ்­வி­டயம் இன்­றைக்கு சாத்­தியம் இல்­லா­விட்­டாலும் எதிர்­வரும் காலங்­களில் சாத்­தி­ய­மாகக் கூடிய பாதையிலேயே நாங்கள் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

கிழக்கு மாகா­ணத்தில் எங்­க­ளுக்கு 11 உறுப்­பி­னர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கு 7 உறுப்­பி­னர்­களும் இருக்­கின்­றார்கள். அப்­ப­டி­யி­ருக்­கத்­தக்­க­தாக நாங்கள் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து ஆட்­சியை நடத்திக் கொண்­டி­ருக்­கின்றோம். அங்கு முத­ல­மைச்­சரை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கே விட்டுக் கொடுத்­துள்ளோம்.

அவ்­வாறு கொடுத்து இணைந்த ஆட்­சியை வெற்­றி­க­ர­மாக இரண்டு வரு­டங்கள் நாம் நடத்­து­வ­தற்­கான காரணம் என்ன? முஸ்லிம் மக்­களும் தமிழ் மக்­களும் சேர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்­பதை இரண்டு மக்­க­ளுக்கும் நாங்கள் காண்­பிக்க வேண்டும். 

அந்த நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த வேண்டும்.  அப்­ப­டி­யான செயல்கள் நடை­பெற வேண்டும். ஏனெனில் யுத்த காலத்தில் பல விட­யங்கள் நடந்­தன. அதனால் மனப்­பா­திப்­புகள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.

அவை ஆற வேண்டும். ஆறு­கின்ற போதுதான் அதற்­கான சாத்­தியம் வரும். ஆனால் அது சாத்­தி­யப்­ப­டு­கின்ற வரைக்கும் அர­சி­ய­ல­மைப்பு மாற்றத்தை செய்­யாமல் இருக்க வேண்­டிய அவ­சியம் என்ன?   இலங்கை  – இந்­திய ஒப்­பந்­தத்­திலும் வடக்கு  கிழக்கு  இணைப்பு இருந்­தது.   ஆனால்  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு என்ற நிபந்­த­னையும் இருந்­தது.

ஆகை­யினால் இந்த விடயங்களை அறிந்து எப்படியாக நாங்கள் நகர வேண்டும் என்பதை தீர்மானித்தல் அவசியம். எல்லாம் கிடைத்தால் தான் ஏற்றுக் கொள்வோம் என்கின்ற நிலை இருந்தால் நாங்கள் தோல்வியுற்ற மக்களாகவே இருப்போம் என்றார்.

நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை. சேனாதிராசா, யாழ். மாவட்டத் தலைவர் பி.கனகசபாபதி ஆகியோரும் உரையாற்றினார்கள். இங்கு சுமார் 50 இளைஞர்கள் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்று கட்சியில் இணைந்து கொண்டனர். (வி-வெ)