மௌனிகளாக இருக்கும் முஸ்லிம் எம்.பிக்களுக்கு ஓர் பகிரங்க கடிதம்



முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் அமைச்சுப் பத­வி­களில் இருந்த முஸ்லிம் அமைச்­சர்­க­ளிடம் தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்குத் தீர்வு பெற்­றுத்­த­ரும்­படி மன்­றா­டியும் அவர்கள் அதில் அக்­கறை கொள்­ள­வில்லை.

எனவே நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து உட­னடித் தீர்வு பெற்­றுத்­தர வேண்டும் என பள்­ளி­வாசல் நிர்­வாகம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பி­னர்கள் 17 பேரும் கையொப்­ப­மிட்ட மகஜர் ஒன்று அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைத் தலை­வ­ருக்கும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது என பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் உப செய­லாளர் எஸ்.எச்.எம். ரவூப் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் 'விடி­வெள்ளி'க்கு கருத்து தெரி­விக்­கையில்;
‘மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பள்­ளி­வா­சலை இடம்­மாற்றிக் கொள்­வ­தற்கு 1 ½ ஏக்கர் காணி வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளிக்­கப்­பட்டும் பள்­ளி­வாசல் நிர்­வாகம் மறுத்­து­விட்­டது என தெரி­விக்­கப்­ப­டு­வது பொய்­யான தக­வ­லாகும். பள்­ளி­வா­ச­லுக்கு காணி தரு­வ­தாக எவரும் கூற­வில்லை.

என்­றாலும் கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை பள்­ளி­வா­ச­லுக்கு காணி தரு­வ­தாக கூறி­யது. ஆனால் எவ்­வ­ளவு காணி தரப்­படும் எனக் கூற­வில்லை. பள்­ளி­வா­சலை தூர ஓர் இடத்­துக்கு இடம் மாற்­றினால் பிரச்­சி­னைகள் ஏற்­படும் என்ற வகை­யிலே கடந்த காலங்­களில் பள்­ளி­வா­சலை நாம் இடம் மாற்­றிக்­கொள்ள விருப்பம் தெரி­விக்­க­வில்லை.

தற்­போது இன நல்­லி­ணக்கம் கரு­தியே பள்­ளி­வா­சலை இடம் மாற்­றிக்­கொள்ள விருப்பம் தெரி­வித்­துள்ளோம். அண்­மையில் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை காணி­யொன்­றினை எமக்குக் காண்­பித்­தது.

என்­றாலும் அக்­கா­ணிக்­க­ருகில் மது­பா­ன­சாலை அமைந்­தி­ருப்­பதால் அக்­கா­ணிக்கு மறுப்புத் தெரி­வித்­துள்­ள­துடன் பள்­ளி­வா­ச­லுக்கு பொருத்தமான மாற்றுக் காணியொன்று வழங்குமாறே கோரிக்கை விடுத்துள்ளோம். 

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக, தீர்வு பெற்றுத்தர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.