கந்தூரி உணவு விஷமானதற்கு பாக்டீரியா காரணம்; மருத்துவ ஆய்வில் தகவல்

NEWS
0


கந்தூரி உணவு விஷமடைந்தமைக்கு ஒரு வகை பாக்டீரியாவே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் நோயுற்றவர்களின் இரத்தம் , வாந்தி மற்றும் மலம் என்பன மருத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது அதனை உறுதி செய்ய முடிந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் அழகையா லதாகரன் கூறுகின்றார்.
இறக்காமம் பிரதேசத்திலுள்ள வாங்காமம் பள்ளிவாசலில் சென்ற வாரம் நடைபெற்ற சமய நிகழ்வின் போது மாட்டிறைச்சி கலந்த சோறு கந்தூரியாக வழங்கப்பட்டிருந்தது.
இதனை உட் கொண்ட பெண்கள் , குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் அயல் பிரதேச வாசிகள் நோயுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இரு பெண்கள் உட்பட மூவர் மரணமடைந்தனர். தலையிடி ,மயக்கம் , வாந்தி மற்றும் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள் இவர்களிடம் காணப்பட்ட நிலையில் உணவு நஞ்சானதே இதற்கு காரணம் என வைத்தியர்களினால் அவ்வேளை தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default