மூதூரில் கைக்குண்டு மீட்பு

 
 
 
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் 7ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள வெற்றுக்காணியொன்றிலிருந்து எஸ்.எப்.ஜி 87 ரக கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்  திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.

மீட்கப்பட்ட குண்டினை திருகோணமலை விசேட அதிரடிப்படையினரின் உதவியோடு செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக மூதூர் பொலிசார் தெரிவித்தனர்.