உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 27 ம் திகதி வெளியிடப்படும்...!


2019 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்குப் பிறகு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயத்தினை தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற இந்தப் பரீட்சையில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சாத்திகள் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்