வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றுவதுடன், அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
