அரசின் விவசாய கொள்கைகளை விமர்சித்த விவசாய உயர் அதிகாரி பதவி நீக்கம்.



விவசாய அமைச்சரின் பிரத்தியேக ஆலோசகர் உள்ளிட்ட விவசாய அமைச்சின் கீழுள்ள அனைத்து பதவிகளிலிருந்தும் பேராசிரியர் மாரம்பேவை நீக்குவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


உடன் அமுலாகும் வகையில் விவசாய அமைச்சின் சகல பதவிகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு விவசாய அமைச்சின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


அரச விவசாய கொள்கைகளை விமர்சித்த நிலையில் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்