பிரதமர் உட்பட அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – டலஸ் அழகபெரும

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், நாடாளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளின் பங்களிப்புடனும் புதிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் டலஸ் அழகபெரும கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.