எந்தவொரு அரசியல்வாதிகளையும் இனி சந்திக்கபோவதில்ல


தம்மைச் சந்திப்பதற்கு எந்தவொரு அரசியல்வாதியையும் இனி அனுமதிக்கப்போவதில்லை என சியம் நிகாயாவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.


நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக 3 பௌத்த பீடாதிபதிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இதுவரை பொறுப்பானவர்கள் பதிலளிக்காத காரணத்தினால் மகாநாயக்க தேரர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற, இடைக்கால அரசாங்கம் அமைப்பது உள்ளிட்ட 6 யோசனைகள் அடங்கிய கடிதத்தை மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சமர்ப்பித்திருந்தனர்.


இந்நிலையில் குறித்த ஆவணத்திற்கு இதுவரை எவரும் சாதகமாக பதிலளிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சியம் நிகாயாவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.