புதிய அமைச்சரவையில் எந்த பதவியும் வேண்டாம். சுதந்திரகட்சி திட்ட வட்டம்..!

 


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்காது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.


விக்கிரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு அழைப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், அதன் பின்னர் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது.