உணவு நெருக்கடியினால் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்கள் நேரடியாகப் பாதிக்கப்படலாம்! – பிரதமர் தெரிவிப்பு!



உணவு நெருக்கடியினால் எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்கள் நேரடியாகப் பாதிக்கப்படலாம் என நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். என்றாலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்தில் இன்று உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


உணவு நெருக்கடியால் எந்தவொரு நபரும் பட்டினியால் இருக்கக்கூடாது என்பதே தமது கொள்கை என தெரிவித்த பிரதமர் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.