பிரதீப் சார்லஸ் உள்ளிட்ட 4 பேர் கைது!


சுயதொழில் வியாபாரிகள் சங்க தலைவர் பிரதீப் சார்ள்ஸ் உள்ளிட்ட நால்வரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


கொழும்பு, செத்தம் வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


சுயதொழில் வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் இன்று (29) செத்தம் வீதியில் இடம்பெறுவதை தடுக்க பொலிஸாரால் வீதித் தடைகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.