மனைவியை கொன்றுவிட்டு மகளையும் கொல்ல முயன்ற தந்தை! – இரத்தினபுரியில் சம்பவம்!


மனைவியை அடித்துக் கொன்ற கணவன் தனது 11 வயது பிள்ளையையும் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.


கொலை செய்யப்பட்ட குறித்த நபரின் மனைவி 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

குடும்பத் தகராறே இந்தக் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.


மனைவியை கொன்றபிற்பாடு சந்தேக நபர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


காயமடைந்த தந்தையும் பிள்ளையும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.