ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவொரு தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்பதால், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதியமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஊடாக ரஷ்யாவுக்கு அறிவித்துள்ளார்.