களனியில் பாரிய போராட்டம் ஆரம்பம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.


களனி பல்கலைக்கழகத்துக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி கொழும்பு கோட்டை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர்.


இதேவேளை, மாணவர்கள் இரவோடு இரவாக தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.