பாதுகாப்புப் படையினரின் சீருடைகளுக்கு நிகரான சீருடை அணிந்திருந்த வெளி தரப்பினரால் தாக்குதல்?

ஜனாதிபதி அலுவலகத்தில் தங்கியிருந்த ஆர்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் சீருடைகளுக்கு நிகரான சீருடை அணிந்திருந்த வெளி தரப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.


ஆர்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேறவுள்ளோம் என்று அறிவித்தல் விடுத்திருந்த போதிலும் பாதுகாப்புப் படையினரின் இவ்வாறான தாக்குதலின் பின்னர் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இத்தாக்குதல்கள் மூலம் அரச பயங்கரவாதத்தைக் கொண்டு வந்து மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்க அரசாங்கம் தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது என அவர் கூறுகிறார்.