கட்சிகளால் செய்ய முடியாததை நாட்டு மக்கள் செய்துள்ளனர்! – பாட்டலி


எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளால் செய்ய முடியாத ஒன்றை இந்த நாட்டு மக்கள் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ராஜபக்ஷகளை விரட்டியடிக்க போராட்டகளத்தில் இருந்த மக்கள் பெரும் பணி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விலகுவதே மக்களை வாயடைக்கச் செய்வதற்கான சிறந்த வழியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.