தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்காத அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முறைப்பாடு..


தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்காத சில  அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் இந்த விடயம் பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


அண்மையில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சில இளையவர்கள் சீனியர் முன்னாள் அமைச்சர்களின் அழைப்புகளுக்கு கூட பதில் அளிப்பதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.