அம்பாறை பிரதேச செயலகத்தில் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்க சென்ற முஸ்லிம் பெண்மணியை கடமையேற்க விடாது பிரதேச செயலாளர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
"இந்த பிரதேச செயலகம் முழுக்க முழுக்க சிங்களவர்கள் கடமையாற்றும் - சிங்கள பிரதேச செயலகம். இங்கு முஸ்லிமாகிய நீங்கள் கடமையாற்ற இடமளிக்க முடியாது.
அதனால் நீங்கள் வேறிடம் சென்று கடமைமை புரியுங்கள்" என்று கூறியுள்ள பிரதேச செயலாளர் - சிங்கள மொழியில் கடிதமொன்றையும் வழங்கி திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனால் - குறித்த பட்டதாரியான முஸ்லிம் பெண், தனது நியமனம் மற்றும் கடமை புரிதல் தொடர்பில் பெரும் அச்சமடைந்துள்ளார்.
எந்தப் பிரதேசத்திலும் கடமையாற்ற தயாராக இருக்க வேண்டும் என்று - அரச ஊழியர்களிடம் உறுதியுரை பெற்றுக் கொண்டுவிட்டு - இவ்வாறு இன ரீதியாக , அரச அதிகாரியான பிரதேச செயலாளரே அதனை மீறுகின்றார் என்றால் - எங்கே " ஒரே நாடு , ஒரே சட்டம்" என்ற கேள்வி எழுகிறது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வின் கொள்கை பிரகடனத்தை மீறியிருக்கும் இந்த பிரதேச செயலாளர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது யார்? பாதிக்கப்பட்டுள்ள - இந்த பட்டதாரி முஸ்லிம் பெண்ணுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பது யார் ? அவரது தொழிலுக்கு யார் உத்தரவாதம் ?
Boomudeen Malik - முகநூல் பக்கம்.

0 கருத்துகள்