நாட்டை மீண்டும் முடக்குவதில் இருந்து தடுக்க வேண்டுமாயின் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கொவிட் வகையை விட டெல்டா வகை கொவிட் 60 -70 வீதம் அதிகமாக பரவக்கூடியது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்