சாதாரண தர பரீட்சை நாட்களில் மின்வெட்டு இல்லை


எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.


மின்னுற்பத்திக்கு அவசியமான நீர் மற்றும் எரிபொருளை போதுமான அளவில் பெற்றுக் கொடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரச நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

இதற்கமைய மே 22 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை மாலை 6.30 க்குப் பின்னர் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தாதிருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.