குழப்பத்துடன் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான பெரமுன கட்சி கூட்டம். நடந்தது என்ன?

  

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தீ வைப்பு  தாக்குதல் சம்பவத்துக்குப்  பின்னர் முதன்முறையாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடும் போது, குழப்பம் ஏற்பட்டது.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற  உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பலத்த பாதுகாப்புடன் கூடிய “ஜனாதிபதி  மாளிகையில் மூடிய கதவு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர், அங்கு  தங்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக ஜனாதிபதியை நோக்கி முழக்கமிட்டனர்.


அநுராதபுரத்தில் ஜனாதிபதியின் தனிப்பட்ட  ஞானா அக்காவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தாக்குதல் கும்பல்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் போது இராணுவம் ஏன் அவரைப் பாதுகாத்தது என்று கோபமாக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.


செவ்வாயன்று பாராளுமன்றம் கூடும் போது பிரதி சபாநாயகர்   குறித்து விவாதிக்க  விரும்பினார், ஆனால் எம்.பி.க்கள் தங்களுக்கு என்ன நடந்தது என்று விவாதிக்க விரும்பினர், அவர்களில் 60 பேர் வீடுகள் மற்றும் அலுவலகங்களை  தீ வைக்கப்பட்டுள்ளதாக  ஒரு எம்.பி கூறினார்.


தங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்களை காப்பாற்ற பொலிசார் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.


கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் டோலவத்த, தனது வீடு மற்றும் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், சனிக்கிழமை கூட்டத்திற்கு வானில் சென்றதாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தனது வாகனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதால் தானும் சிறிய SUV வாகனத்தில் பயணித்ததாக தெரிவித்துள்ளார்.


சத்தமும் கோபமும் கொண்ட எம்.பி.க்கள், பொலிசார் மற்றும் இராணுவத் தலைவர்கள் தங்களுக்குக் கீழ் இருக்கும் ஆட்களை அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தவும், கலவரக்காரர்களைத் திருப்பி தாக்கவும் உத்தரவிடத் தவறியதாக விமர்சித்தனர்.


உணர்ச்சிவசப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் சரமாரியான முறைப்பாடுகளையடுத்து   ஜனாதிபதி உடனடியாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவை அழைத்திருந்தார்.


பொலிஸ் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போகக் கூடும் என மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் அரசாங்கத்தை எச்சரித்ததாக   விக்கிரமரத்ன பதிலடி கொடுத்ததாக   வட்டாரங்கள் தெரிவித்தன.  கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி,பேசி, பல்வேறு இழிவான கருத்துகளை கூறி பொலிஸ் மா கடுமையாக விமர்சித்துள்ளனர்.  


"கோட்டா கோ காமா" மீதான தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.


 ரமேஷ் பத்திரன கருத்துரைக்கையில்,  சம்பவத்தின் ஆரம்பம் முதல் ஜனாதிபதியுடன் தான் இருந்ததாகவும், ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கும் இராணுவத் தளபதிக்கும் உத்தரவு பிறப்பித்ததை தான் பார்த்ததாகவும் ஆனால் அந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக செயற்படாத இராணுவத் தளபதி தனது பதவியை இராஜினாமா செய்யுமாறும் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஏனைய V.V.I.P.களின் பாதுகாப்புக்கு படையினர் ஈடுபடுத்தப்படாத நிலையில், ஜனாதிபதியின் தனிப்பட்ட  ஞானா அக்காவை இராணுவம் எவ்வாறு பாதுகாத்தது என பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேட்டனர்.


எவ்வாறாயினும், ஞானா அக்காவின் வீடு மற்றும் விகாரையும் தீப்பிடித்து எரிந்ததாகவும், 150 இராணுவத்தினரால் அதனைத் தடுக்க முடியாமல் போனதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.   ஞானாக்கா அவர் சமீபத்தில் காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை அடக்குவதற்காக போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வசிகம் செய்திருந்தார். 


ஞானா அக்காவின் சூனியத்தால் கூட சீற்றம் கொண்ட காளி,  தெய்வம் கும்பலை தடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. 


இதேவேளை, அண்மைய சம்பவங்கள் காரணமாக முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி, அவரது மனைவி மற்றும் குழந்தை மூன்று இடங்களில் தங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதே இதற்குக் காரணம்.


தொழில் புரிபவர் என்ற வகையில் வருமான வரியை முறையாக செலுத்துவதாகவும், யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்துவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


அரசியலில் இருந்து பணம் திரட்டுவதற்காக அல்ல, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக தான் அரசியலுக்கு வந்ததாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு தெரிந்தவரையில் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைவரும் அரசியலில் சம்பாதித்த பணத்தில் அல்ல, வங்கிக் கடனில் வீடுகளை கட்டியுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட  வீடுகளை இழந்த அமைச்சர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலவத்துகொட வீடமைப்புத் திட்டத்தில் தற்காலிகமாக வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


இவ்வாறான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தபோதிலும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டனர்,