மஹிந்த கஹந்தகமகே கைது


மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்திருந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஆகியோர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.